Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பதி பிரம்மோத்சவ திருவிழாவுக்கு 5 டன் பூமாலைகள்

அக்டோபர் 15, 2023 12:41

திருச்செங்கோட்டு: திருச்செங்கோட்டிலிருந்து திருமலை திருப்பதி பிரம்மோத்சவ திருவிழாவுக்கு 5 டன் பூமாலைகள் அனுப்ப  ஏற்பாடு செய்யப்பட்டு,  400 க்கும்  மேற்பட்ட பெண்கள் பூக்களை மாலைகளாக தொடுத்தனர். 

ஆந்திரா மாநிலம்  திருப்பதியில் அருள்பாளிக்கும் ஸ்ரீமன் நாராயணனுக்கு  ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்சவத்  திருவிழாவுக்கு  திருச்செங்கோட்டில் இருந்து பூமாலைகள் அனுப்ப பட்டு வருகிறது.

இதன் படி இந்த ஆண்டு பிரமோத்சவ விழா நாளை நடக்க உள்ளது. இதற்காக இந்த ஆண்டு  5  டன் மணம் உள்ள மலர்களை 400 க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலைகளாக்கினார்.

திருச்செங்கோடு நாடார்  திருமண மண்டபத்தில்   திருப்பதி ஸ்ரீமன் நாராயணனுக்கு சுமார் 5 டன்எடையுள்ள மணம் உள்ள மலர்களை மாலைகளாக தொடுக்கும் விழா நடந்தது.திருச்செங்கோடு சுற்றுபகுதிகளை சேர்ந்த நுற்றுக்கணக்கான பக்தர்கள் வழங்கிய சம்பங்கி, மஞ்சள் , சிவப்பு, சாமந்தி பூக்கள்,தாமரை. மரு,      மரிக்கொழுந்து உள்ளிட்ட சுமார் 5  டன் எடையுள்ள பல வண்ண பூக்களைதிருச்செங்கோடு, சேலம், கொங்கணா புரம், ராசிபுரம், ஆத்தூர் பகுதிகளை சேர்ந்த பெண்கள் மாலைகளாக தொடுத்தனர். 

இது குறித்து கொங்கணாபுரத்தை சேர்ந்த திருமலை திருப்பதிஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபாடிரஸ்ட் நிர்வாகிகள் சுகந்தி, கனகராஜ் ஆகியோர் கூறியதாவது கொங்கணாபுரத்தை சேர்ந்த திருமலை திருப்பதிஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபாடிரஸ்ட் சார்பில் ரதசப்தமி, வைகுண்ட ஏகாதசி, உகாதி, பிரம்மோற்சவத் திருவிழா ஆகியவற்றுக்கு பூமாலைகள் வருடம்தோறும் தொடுத்துஅனுப்பி வருகின்றோம்.இறைப்பணியில் அதிக ஆர்வமுள்ள பக்தர்கள் மாலை தொடுக்கும் பணியை செய்தனர். 

மேலும் மாலைகளோடு கரும்பு தென்னம்பாளை, தென்னங்குருத்து, இளநீர், பாக்கு குழைகள், மாங்கொத்துகள் ரூ 2 1/2 லட்சம் மதிப்புள்ள 10 ஆயிரம் ரோஜா செடிகள் ஆகியவற்றையும் மாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மாலைகள்  உள்ளிட்ட அனைத்தையும் 3 லாரிகள் மூலம் திருமலைக்கு அனுப்பபடும் என  தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்